Dr. Jasser Auda
×
Languages

Author: Editor

മതവിശുദ്ധി സംരക്ഷിക്കാന്‍ പലായനം ചെയ്യേണ്ടതുണ്ടോ

പണ്ഡിതന്മാര്‍ക്കിടയില്‍ വ്യത്യസ്ത അഭിപ്രായങ്ങള്‍ നിലനില്‍ക്കുന്ന മൗലിക പ്രാധാന്യമുള്ള ഒന്നാണ് ‘യുദ്ധഭൂമി’ (ദാറുല്‍ ഹര്‍ബ്).

Read More

சிவில் தேசம்

கட்டுரைச் சுருக்கம் இஸ்லாமிய விழுமியம் மற்றும் ஷரீஆவின் இலக்குகளை முன்னிறுத்தியே நவீன இஸ்லாமிய அரசியல் சிந்தனை குறித்து சிந்திக்கப்பட வேண்டும். ஏனெனில், சமகால அரசியல் கோட்பாடுகளான பல கட்சி முறைமை, நல்லாட்சி, வலுவேறாக்கம் மற்றும் யாப்புவாதம் போன்றவற்றை இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் அணுகும் போது, வரலாற்று நிகழ்வூகள், தனித்தனியான பிரத்தியேக அல்குர்ஆன் மற்றும் அஸ்ஸூன்னா சட்டவசனங்களை (Specific verses) பயன்படுத்தி ஒப்பீடு செய்யும் வழிமுறைகளே பயன்படுத்தப்பட்டுள்ளதனை அவதானிக்க முடியும். விளைவாக, ஒவ்வொரு காலத்திலும் ஆதிக்கம் செலுத்தும் அரசியல் ஒழுங்குகளுக்குல் எமது அரசியல் கலந்துரையாடல்கள் சரணடைந்து விடுகின்றன. ஆனால், இஸ்லாமிய விழுமியங்கள் மற்றும் நோக்கங்களின் ஒளியில் நவீன இஸ்லாமிய அரசியல் சிந்திப்புக்கள் அமையப் பெறும் பட்சத்தில், சமகால அரசியல் கோட்பாடுகளின் கோளாறுகளை அடையாளப்படுத்தவும், அதனை அபிவிருத்தி செய்யவும் முன்மாதிரி அரசியல் கலாச்சாரமொன்றை கட்டியெழுப்புவதற்கான புதிய முறைவழிகளை கண்டறிவதற்கும் ஏதுவாக அமையும். இப்பின்புலத்தில் ஏகாதிபத்திய உலகம், ஆட்சியாளரின் நலனை மையப்படுத்திய தேசிய அரசுகள் முறைமை மற்றும் அரசியல் ரீதியாக பலவீனப்பட்டுப் போன சிவில் சமூகங்கள் என்ற மும்முனை சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கு “சிவில் தேசம் கோட்பாடு” சிறந்ததோர் அரசியல் சிந்தனையாகும். இச்சிந்தனை இஸ்லாமிய ஷரீஆவின் இலக்குகளுடன் முழுயான உடன்படுவதுடன், நவீன கால அரசியல் கலந்துரையாடல்களில் பங்குகொள்ளும் சகல சிந்தனை முகாம்களையும் உள்ளீர்க்கக் கூடிய வலிமையை அது கொண்டுள்ளது. அதேபோல் சகல தரப்பினரும் இணைந்து இஸ்லாமிய ஷரீஆவின் அரசியல் இலக்குகளை எய்துவதற்கான பொதுத் தளத்தையும் அக்கோட்பாடு ஏற்படுத்திக் கொடுக்கின்றன. முஸ்லிம் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை என்ற வித்தியாசமின்றி, அனைத்து நிலங்களிலும் இதனை செயற்படுத்த முடியும். சமகால அரசியல் சூழமைகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி விடக்கூடிய சாதகமான பல கூறுகள் “சிவில் தேசம்”  கோட்பாடிற்குல் புதைந்துள்ளன. அறிமுகம் இஸ்லாமிய அரசியல் சிந்தனையினுடைய வரலாற்றோட்டத்தில் “அரபுவசந்தம்” ஓர் திருப்பமாகும். பல நூற்றாண்டாக போதிய கரிசனை செலுத்தப்படாதிருந்த இத்துறை, அதன் பின்புதான் இஸ்லாமிய அறிஞர்களது ஒட்டு மொத்த கவனத்தை ஈர்த்தன. ஏகாதிபத்திய உலக ஒழுங்கிற்கும், நவீன தேசிய அரசு முறைமைக்கும் மத்தியில் இஸ்லாத்தின் அரசியல் இலக்குகளை எவ்வாறு அடைவது? என்ற வினாவிற்கான விடையை சகல இஸ்லாமிய அரசியல் துறைசார் புத்திஜீவிகளும் தேடத் துவங்கினர். இப்புதிய ஆய்வுகளின் தாக்கம் அரபுலகம் என்ற வட்டத்தையும் தாண்டிச் சென்று, முஸ்லிம்களின் அரசியல்...

Read More

நவீன இஸ்லாமிய சிந்தனையும் , மகாஸிது ஷரீஆவும்

நேற்று (02.12.2015 ) ‘நவீன இஸ்லாமிய சிந்தனையும் , மகாஸிது ஷரீஆவும்’ என்ற தலைப்பில் மாலை அமர்வொன்று இஸ்லாஹிய்யா வாசிகசாலை விரிவுரைகள் மண்டபத்தில் இடம்பெற்றன. இக்குறித்த நிகழ்வில் ‘மகாஸிது ஷரீஆ – தலீலுன் லில் முப்ததஈன்’ என்ற பேராசிரியர் ஜாஸிர் அவ்தாவினுடைய நூலினை மையப்படுத்திய கலந்துரையாடல்களே இடம்பெற்றன. இந்நிகழ்ச்சியில் முதல் அம்சமாக மூன்றாம் வருட மாணவர்களான அஸ்மான் கான் , சகோ. சுஜீத் மற்றும் சகோ சாஜீத் போன்றவர்கள் நூல் பற்றிய தமது அவதானங்களை முன்வைத்தனர். அதனைத் தொடர்ந்து, நவீன இஸ்லாமிய சிந்தனையை வடிவமைப்பதில் மகாஸித் சிந்தனையின் வகிபாகம் தொடர்பான உஸ்தாத் ஸகி பவ்ஸ் , உஸ்தாத் இப்திஹார், உஸ்தாத் அஸ்ஹர் மற்றும் உஸ்தாத் ரிஸ்மி போன்றவர்கள தமது கருத்துக்களை முன்வைத்தனர். இன்னும், மகாஸிது ஷரீஆ துறையில் ஈடுபாடு காட்டும் ஏனைய இஸ்லாமிய சிந்தனையாளர்கள் பற்றிய அறிமுகமும் இடம்பெற்றமை சிறப்பம்சமாகும். இறுதியாக, மகாஸிது ஷரீஆ தொடர்பான கேள்வி பதில் அமர்வொன்றும் இடம்பெற்றமை நோக்கத்தக்கது. இக்குறித்த மாலை அமர்வு இஸ்லாமிய சிந்தனையை கற்பதன் அவசியத்தையும், மாணவர்களது வாசிப்பு ஆர்வத்தையும் அதிகரித்திருக்கும் என ஏற்பாட்டுக் குழு ஆழமாக நம்புகிறது. இன்னும், இஸ்லாஹிய்யாவின் இறுதி வருட மாணவர்களுடைய பாடத்திட்டத்திலும் ‘மகாஸிது ஷரீஆ’ ஒரு தனிப் அலகாக கற்பிக்கப்படுவதனால் , அக்குறித்த அலகினை கற்பதற்கான பீடிகையாகவும் இந்நிகழ்ச்சி அமைந்திருக்கும் என்பது மற்றோர்...

Read More
  • 1
  • 2

Follow us on Facebook